உச்சம் தொட்ட பிறகு வந்த வழி மறந்த ரஜினி கமல்..! இதெல்லாம் உங்களுக்கே நியாயமா..?

0
777
rajini-kamal
rajini-kamal

Rajini Kamal forgets the way she came after reaching the peak: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குனர்களில் இயக்குனர் கே பாலச்சந்தர் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் புன்னகை மன்னன் அபூர்வ ராகங்கள் எதிர்நீச்சல் வறுமையின் நிறம் சிகப்பு உன்னால் முடியும் தம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கி ரசிகர் மத்தியில் பிரபலமானவர்.

அந்தவகையில் பாலசந்தர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் அவருடைய திரைப்படங்களில் மௌனமாக அரசியலும் பேசியிருப்பார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது அசைக்கமுடியாத தூண்களைப் போல இருக்கும் கமல் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது கே பாலச்சந்தர் தான்.

அந்த வகையில் ரஜினி கமல் ஆகிய இருவரும் சிறந்த நடிகர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தாலும் பாலச்சந்தர் இயக்கத்தில் அதிக அளவு திரைப்படங்கள் நடித்தது கமலஹாசன் மட்டும்தான் அது மட்டும் இல்லாமல் கமல் ரஜினி ஆகிய இருவரும் கே பாலச்சந்தர் அவர்கள் தான் தன்னுடைய குரு என்றும் சொல்வார்கள்.

இவ்வாறு புகழின் உச்சத்திற்கு சென்ற பிறகு ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படங்கள் நடிப்பதற்கு யோசிக்க ஆரம்பித்தார்கள் ஆகையால் அவர் தயாரிப்பில் வேண்டுமானாலும் நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அவருடைய இயக்கத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

balachandar
balachandar

இதனால் இயக்குனர் பாலச்சந்தர் அவர்களும் திரைப்படம் இயக்குவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.